Thursday 15 March 2018

முற்றுப்புள்ளி


தனிமையில் இருக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே
அறிவாய் உந்தன் கவலைகளை
படிக்கும்வரை பள்ளி, பல்கலை என்று பலநாட்கள் கழிந்தன
காலைதோறும் பணியிடம் சென்று -பின்
உனை வளர்க்க(அறிவு)  கல்வி நிலையம் நிதம் சென்று...
இத்தனை காலமும் இப்படியே போயிற்றடி- மகளே
இன்றொரு நாள் மட்டும் அத்தனையும் நீக்கி 
என்னுடன் மட்டுமே பேசிக்கொண்டேனடி
எத்தனை கவலைகள் என்னுள்ளே - போடி
என்னையே நம்பவில்லையடி- மகளே
ஒரு இரண்டரை மணித்தியாலங்கள் இருந்திருப்பேனா???- இல்லை
இருந்த இடத்தை விட்டு எட்டு மணித்தியாலங்கள் எழும்பவேயில்லையடி
என்னவோ பங்குனி காலம்  என்பதால்
பகலும் என்னைக் கடக்க விரும்பவில்லை போலும்
இத்தனை காலமும் என்னையே நான் மீட்டவில்லையடி - கொஞ்சம் பொறு!!!!
இறுதியில் வெறுப்பு மேலிட வெற்றிடமாய் கிடந்தது -என்
நிழலாடும் உருவபொம்மை
அழுது கொட்டிட  மனது விரும்பிட
என் கண்ணீரை கட்டியணைத்து முத்தமிட - காலமகள்
கருக்கொண்டு நீர் பற்றாக்குறை போக்க,
என் கண்ணீரையும் கடன் கேட்டாளடி - மகளே
முதல்முறையாக என்னை வெறுத்து அழுகின்றேன்!!!
உலக மேடையில் எனக்கான அத்தியாயத்தை 
முடிக்காமலேயே நான் என்னை முடித்துக்கொண்டால்???




Saturday 13 January 2018

                                    ஓர் நாள் வீதியில் .....





நீயும் நானும் நினைத்துக் கொள்கிறோம்

உலகம் வெகுவாய் மாறிவிட்டதென்று

எதில் மாற்றம் கண்டாய் - நீ

நீ உடுக்கும் உடையிலா, உன் அலட்டல் அலைபேசியிலா

எதுவும் மாறவில்லை இங்கே, பெண்ணைப் பிடித்த 

பிடித்த பிசாசுகள் இதிகாசங்களில் மட்டும் தானா? இல்லை

இந்த நொடி வரையிலும்,

பேரூந்தில் உன் இச்சை தீர்க்க முன்னிற்கும் இளைஞனே!

பின் தொடரும் பேரூந்தில் கூட  உன் வீட்டுப் பெண் இருக்கலாம்

அதிலும் உன் போல் இளைஞனைக் காணக்கூடும்......

அந்தி சாயும் தருணமதில் அலுவலே அன்றி பேரூந்துப் பயணத்தில்

அருகிலிருக்கும் அணங்கியை நெருங்குவதேனோ?

அன்று கண்டோம் கயவனை - இன்று 

பகட்டிற்கு முகமினுக்கி, உன் நெடிய வியர்வையை 

வெளிநாட்டவன் மலர் வாசனையில் மாற்றி 

கையிலொரு வெள்ளி மின்னி, கழுத்திலொரு  இரும்பு மின்னி 

இன்று உனக்கான அடையாளங்கள் இவைகள்

உன் அந்தரங்கத்தை வெட்ட வெளியில் திட்டமிட்டுக்

காட்டிக் கொள்வதில் சுகம் கண்டாய்  நீ

எதற்கென்று பெண்ணாய் பிறந்தோமடா

இறைவனிடம் மனுக்கொடுக்கின்றேன் - நான்

பெண்களை கற்சிலைகளாய் மாற்றிட 

தேர்தலில் பெண்கள் தேவையென்றிடும் ஆண்களே!

தெருவிலே முதலில் வழி விடுங்கள்

ஒரு கணம் நின்று நிதானியுங்களேன்

கண்களால் கைது செய்யப்பட்டும் காட்சிகளால் மௌனிக்கப்பட்டும்

காட்சிப் பிழைகளானோம் இந்தப் பூமியில் .......???




                                                                                                                        திவி