Thursday 15 March 2018

முற்றுப்புள்ளி


தனிமையில் இருக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே
அறிவாய் உந்தன் கவலைகளை
படிக்கும்வரை பள்ளி, பல்கலை என்று பலநாட்கள் கழிந்தன
காலைதோறும் பணியிடம் சென்று -பின்
உனை வளர்க்க(அறிவு)  கல்வி நிலையம் நிதம் சென்று...
இத்தனை காலமும் இப்படியே போயிற்றடி- மகளே
இன்றொரு நாள் மட்டும் அத்தனையும் நீக்கி 
என்னுடன் மட்டுமே பேசிக்கொண்டேனடி
எத்தனை கவலைகள் என்னுள்ளே - போடி
என்னையே நம்பவில்லையடி- மகளே
ஒரு இரண்டரை மணித்தியாலங்கள் இருந்திருப்பேனா???- இல்லை
இருந்த இடத்தை விட்டு எட்டு மணித்தியாலங்கள் எழும்பவேயில்லையடி
என்னவோ பங்குனி காலம்  என்பதால்
பகலும் என்னைக் கடக்க விரும்பவில்லை போலும்
இத்தனை காலமும் என்னையே நான் மீட்டவில்லையடி - கொஞ்சம் பொறு!!!!
இறுதியில் வெறுப்பு மேலிட வெற்றிடமாய் கிடந்தது -என்
நிழலாடும் உருவபொம்மை
அழுது கொட்டிட  மனது விரும்பிட
என் கண்ணீரை கட்டியணைத்து முத்தமிட - காலமகள்
கருக்கொண்டு நீர் பற்றாக்குறை போக்க,
என் கண்ணீரையும் கடன் கேட்டாளடி - மகளே
முதல்முறையாக என்னை வெறுத்து அழுகின்றேன்!!!
உலக மேடையில் எனக்கான அத்தியாயத்தை 
முடிக்காமலேயே நான் என்னை முடித்துக்கொண்டால்???




No comments:

Post a Comment